சன்னலோர மரக்கிளையில்
உட்கார்திருந்த ஒற்றைக்கிளி
கீ... கீ...யென
கத்திக் கொண்டேயிருந்தது
சீரான இடைவெளியில்!
என்னவாயிற்று?
இரை கிடைக்கவில்லையா?
தன் குஞ்சுகளைத் தொலைத்துவிட்ட
தவிப்பைச் சொல்கிறதா?
காதல் ஜோடியைக்
காணவில்லை என்கிறதா?
சிறிதும் எனக்கு
அர்த்தப்படவில்லை
அதன் மொழி!
ஆயினும்
காற்றோடு கலந்து வந்த
கிளியின் குரல்
விட்டுச் சென்றது எனக்குள்
ஒரு மெல்லிய சோகத்தை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக