அன்பே... அது ஒரு அந்திப் பொழுது!
கடற்கரையில் நாமிருவரும்
பக்கம், பக்கமாய்!
எழும்பி விழுந்த அலைகளைப் பார்த்து
ஆர்ப்பரித்தன உன் கண்கள்!
உருச் செய்த வீட்டுப் பாடத்தை
ஆசிரியரிடம்
நடுக்கத்துடன் ஒப்புவிக்கும்
ஒரு மாணவனைப் போல
கண்மணி உன்னிடம் என்
காதலைச் சொன்னேன்
கவனமாக!
நீயோ
மௌனமாய் எழுந்துனது
ஆடையில் ஒட்டிக் கிடந்த
மணலை உதிர்த்தவாறே
மறைந்து போனாய்
ஒரு புள்ளியாகி!
இனியவளே...
உன்னிடம் நான் உரைத்த
உண்மைக் காதல்
கலந்து கிடக்கிறது
நீ உதிர்த்துச் சென்ற
மணல்களில்
இன்னமும் கூட!
கடற்கரையில் நாமிருவரும்
பக்கம், பக்கமாய்!
எழும்பி விழுந்த அலைகளைப் பார்த்து
ஆர்ப்பரித்தன உன் கண்கள்!
உருச் செய்த வீட்டுப் பாடத்தை
ஆசிரியரிடம்
நடுக்கத்துடன் ஒப்புவிக்கும்
ஒரு மாணவனைப் போல
கண்மணி உன்னிடம் என்
காதலைச் சொன்னேன்
கவனமாக!
நீயோ
மௌனமாய் எழுந்துனது
ஆடையில் ஒட்டிக் கிடந்த
மணலை உதிர்த்தவாறே
மறைந்து போனாய்
ஒரு புள்ளியாகி!
இனியவளே...
உன்னிடம் நான் உரைத்த
உண்மைக் காதல்
கலந்து கிடக்கிறது
நீ உதிர்த்துச் சென்ற
மணல்களில்
இன்னமும் கூட!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக