மனத்தராசு
நகரமும், கிராமமும் ஒரு நாள் என்
கனவில் வந்தன சண்டையிட்டவாறே.
நான்தான் சிறந்தவென்று நகரம் சொன்னது.
நானின்றி நீயில்லை என்று வாதிட்டது கிராமம்.
இருவரில் சிறந்தவரை
எனது மனத் தராசில் எடைபோட்டு
தேர்வு செய்யலாம் என்றேன்.
ஒப்புக்கொண்டன இரண்டும்.
முதலில்
நகரத்தின் அம்சங்களையெல்லாம்
எடுத்து வைத்தேன் ஒரு தட்டில்
ஒவ்வொன்றாய்.
நியான் விளக்குகள், கண்ணைப்
பறிக்கும் விளம்பரப் பலகைகள்
வித, விதமாய் மோட்டார் வாகனங்கள்
வானத்தையே தொட முயற்சிக்கும்
தொகுப்பு வீடுகள்
செல்வச் செழிப்பில் கொழிக்கும்
பன்னாட்டு நிறுவனங்கள்
பிரமாண்ட சாலைகள்
பிரமிக்க வைக்கும் வணிக வளாகங்கள்
சர்வதேச தரத்தில் கல்வி அளிக்கும்
பள்ளிகள், கல்லூரிகள்
பல்கலைக் கழகங்கள்
அறிவையும், திறனையும்
செம்மைப்படுத்த உதவிடும்
சிறப்பு பயிற்சி மையங்கள்
அதிசயிக்க வைக்கும் பூங்காக்கள்
சிற்றுண்டிச் சாலைகள், கடற்கரை விடுதிகள்
ஆடையைத் தவிர வேறெதிலும்
சேமிப்பை விரும்பாத
நவீனயுக யுவதிகள்
வாழ்க்கையோடு கலந்துவிட்ட
வாழ்க்கையோடு கலந்துவிட்ட
வசதி, வாய்ப்புக்கள் என
எல்லாவற்றையும் எச்சரிக்கையோடு
அடுக்கி முடித்தேன்.
நல்ல எடையோடு
எதிர்புறத் தட்டை
ஏளனமாய்ப் பார்த்தது 'நகரம்'.
மறு தட்டிலோ
இயற்கை வளங்களான
மாசு படாத காற்று
வற்றாத நீர் நிலைகள்
பச்சைப் புல்வெளிகள்
மரங்கள், தோட்டங்கள்
மக்களின் அடிப்படைத் தேவையான
பயிர்கள், தானியங்கள் உற்பத்தி
பொதுநல நோக்கு, பரந்த மனப்பான்மை
எளியவனுக்கு உதவுதல்
எதிர்பார்ப்பற்ற அன்பு, ஊர் கட்டுப்பாடு
எளிய வாழ்க்கை முறை
உறவுகளையும், நட்புகளையும்
ஆராதிக்கும் பண்பு
மழை சார்ந்து நிற்கும்
மண்ணைச் சார்ந்து
பிழைப்பு நடத்துவதில்
பெருமை கொள்ளும் மக்கள்
நிலையற்ற வருமானத்திலும்
நிறைவாய் உணர்கிற மனப்பாங்கு
பிறருக்கு உதவிடத் தயங்காத
மனித நேயமிக்க ஈர மனங்கள் என
'கிராமத்தின்' அம்சங்களையெல்லாம்
கவனமாய் எடுத்து வைத்தேன்.
கூடுதல் எடையோடு
வெற்றி கண்டது 'கிராமம்'.
கடுமையான போட்டியில்
கிராமத்தின் வெற்றியை
குறிப்பாய்த் தீர்மானித்தது
எதுவாயிருக்கும்? என்று
எனக்குள் அப்போது
எழுந்தது ஒரு கேள்வி.
'மனிதம்' என்கிற
திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
கலைந்து போயிருந்தது
கனவு.
அடுக்கி முடித்தேன்.
நல்ல எடையோடு
எதிர்புறத் தட்டை
ஏளனமாய்ப் பார்த்தது 'நகரம்'.
மறு தட்டிலோ
இயற்கை வளங்களான
மாசு படாத காற்று
வற்றாத நீர் நிலைகள்
பச்சைப் புல்வெளிகள்
மரங்கள், தோட்டங்கள்
மக்களின் அடிப்படைத் தேவையான
பயிர்கள், தானியங்கள் உற்பத்தி
பொதுநல நோக்கு, பரந்த மனப்பான்மை
எளியவனுக்கு உதவுதல்
எதிர்பார்ப்பற்ற அன்பு, ஊர் கட்டுப்பாடு
எளிய வாழ்க்கை முறை
உறவுகளையும், நட்புகளையும்
ஆராதிக்கும் பண்பு
மழை சார்ந்து நிற்கும்
மண்ணைச் சார்ந்து
பிழைப்பு நடத்துவதில்
பெருமை கொள்ளும் மக்கள்
நிலையற்ற வருமானத்திலும்
நிறைவாய் உணர்கிற மனப்பாங்கு
பிறருக்கு உதவிடத் தயங்காத
மனித நேயமிக்க ஈர மனங்கள் என
'கிராமத்தின்' அம்சங்களையெல்லாம்
கவனமாய் எடுத்து வைத்தேன்.
கூடுதல் எடையோடு
வெற்றி கண்டது 'கிராமம்'.
கடுமையான போட்டியில்
கிராமத்தின் வெற்றியை
குறிப்பாய்த் தீர்மானித்தது
எதுவாயிருக்கும்? என்று
எனக்குள் அப்போது
எழுந்தது ஒரு கேள்வி.
'மனிதம்' என்கிற
மகத்தான அம்சமே என
அசரீரி ஒலிக்கதிடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
கலைந்து போயிருந்தது
கனவு.
2 கருத்துகள்:
அருமையான ஒப்பீடு
அருமையான படைப்பு
வசதிவாய்ப்புகளை விட
மனித நேயமே கிராமத்தின் சிறப்பு
அதை மிக அழகாக சொல்லிப் போகும் கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
ரமணி,
தங்களது வரவிற்கும், ஊக்கமூட்டுகின்ற கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக